Home / குற்றம் / சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை மீட்பு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறை

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை மீட்பு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறை

சேலம் மாநகர் குகை அருகே உள்ள பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை (22)-பிரியா தம்பதியினர் இவர்களுக்கு ரித்திகா என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இவர்கள் அழகாபுரம் பகுதியில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் அடியில் குழந்தையுடன் தங்கி உள்ளனர் இந்த நிலையில் சேலம் மணக்காடு பகுதியில் வாடகைக்கு குடியிருந்த கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ரமேஷ் (33) என்பவர் குழந்தையை கடத்தி சென்றுள்ளார், குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்கள் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது ரமேஷ் குழந்தையை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது பின்னர் அழகாபுரம் காவல் துறையினர் பின் தொடர்ந்து சென்று கோவையை நோக்கி குழந்தையுடன் சென்று கொண்டிருந்த ரமேஷை நாமக்கல் பகுதியில் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இல்லாத ரமேஷ் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் இரண்டாவது மனைவிக்கும் குழந்தை இல்லாததால் இந்த குழந்தையை வளர்ப்பதற்காக எடுத்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது இதனை அடுத்து காவல்துறையினர் குழந்தையை மீட்டு நீதிமன்ற உத்தரவுபடி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த குழந்தை கடத்தல் விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? அல்லது விற்பனை செய்வதற்காக குழந்தையை கடத்தி சென்றா? என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் ஒன்பது மாத பெண் குழந்தை கடத்தப்பட்டு காவல்துறையால் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *