Home / தமிழ்நாடு / திருநெல்வேலி / காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் தமிழ்நாட்டிற்கு பல கோடி ரூபாய் திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்- நைனார் நாகேந்திரன்

காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் தமிழ்நாட்டிற்கு பல கோடி ரூபாய் திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்- நைனார் நாகேந்திரன்

உருட்டும் திருட்டும் திமுகவின் கொள்கை என்றும் ஓபிஎஸ்சின் வருகை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளிடம் தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருகை முன்னிட்டு நெல்லை மகாராஜா நகரில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை தமிழிசை சௌந்தர்ராஜன் மூத்த தலைவர்கள் எச் ராஜா வானதி சீனிவாசன் தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இணை பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உட்பட உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆலோசனை நடத்தி வருகிறனர்.

முன்னதாக பிரதமரின் வருகை குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பல லட்சம் கோடிக்கு அதிகமான திட்டங்களை நரேந்திர மோடி தந்துள்ளார் 140 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் ரயில் போக்குவரத்து வந்தே பாரத் ரயில் போன்ற நிறைய திட்டங்களை தந்துள்ளார். பிரதமர் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை அவர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறியது குறித்து கேட்டபோது, திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக இதை சொல்லி இருக்கிறார் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவது புதிதல்ல ஏற்கனவே பலமுறை இங்கு வந்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு கூட ராஜேந்திர சோழனின் புகழை உலகெங்கும் பரப்பியதற்கு மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். உருட்டும் திருட்டும் உங்கள் பார்வை என்ன கேட்டதற்கு, அது திமுகவின் கொள்கையா இருக்கிறது தமிழக முதல்வர் முதலில் தமிழகத்தை பற்றி கவலைப்பட வேண்டும் பீகாரை பற்றி கவலைப்பட வேண்டிய தேவை இல்லை அது தேர்தல் ஆணையத்தின் முடிவு முதல்வர் நெருப்பாக இருக்கலாம் கூட்டணி குறித்து எதிர்க்கட்சிகளிடம் ஒரு முறையாவது கேளுங்கள் எங்களிடம் அடிக்கடி கேட்காதீர்கள் ஓபிஎஸ் பிரதமரை சந்திப்பது குறித்து எனக்கு தெரியவில்லை அவர்கள் நேரடியாக பிரதமர் தொடர்பு வைத்துள்ளார்களா கேட்டார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *