Home / நிகழ்வுகள் / படையாண்ட மாவீரா திரைப்படம் மண்ணையும் மக்களையும் காக்கும் வகையில் எடுக்கப்பட்ட காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் – திரைப்பட இயக்குநர் கௌதமன்

படையாண்ட மாவீரா திரைப்படம் மண்ணையும் மக்களையும் காக்கும் வகையில் எடுக்கப்பட்ட காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் – திரைப்பட இயக்குநர் கௌதமன்

திருப்பத்தூர்மாவட்டம்,திருப்பத்தூரில் திரைப்பட இயக்குநர் கௌதமன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் செப்டம்பர் 17ஆம் தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் பேனர்கள் வைத்து நினைவஞ்சலி செலுத்த வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாறு படம் படையாண்ட மாவீர வருகின்ற 19ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட உள்ளது. அதனை அனைத்து பாட்டாளி மக்கள் கட்சி பொதுமக்களும் கண்டு களிக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார் படையாண்ட மாவீரா படைப்பை தமிழர் குடிக்கு அர்பணிப்பு செய்கிறேன் இனத்தை மொழியை காக்க ஓரணியில் நில்லுங்கள் அப்படி இல்லை என்றால் மண்ணுக்கு சம்பந்தமில்லா கூட்டம் உங்களை ஆளும் தமிழர் வரலாறு நிலைக்க உன்னத படைப்பு தான் படையாண்ட மாவீரா காடுவெட்டி குரு மீது ஜாதி வெறியன் என்ற பரப்புரை தகர்க்க அவர் பல தலைமுறையாக காடுவெட்டி குரு மக்கள் வாழ வழிவகை செய்தார் மேலும் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது நிலக்கரி சுரங்கம் அமைக்க கேட்டு பேரம் பேசிய போது அடிபணியாமல் 35 கிராமங்களையும் காத்தவர் காடுவெட்டி குரு படம் முடியும் போது ஒரு தமிழ் ஜாதி படமாக முடியும் பலர் காடுவெட்டி குரு மீது வன்மம் கொண்டுபல பதிவுகளை பதிவிடுகின்றனர் ஆனால் எனக்கு யார் மீதும் கோபமில்லை கன்னுள்ளவர்கள் இப்படைப்பை பார்த்த போது 95 சதவிகிதம் கொண்டாட்டமும் வீரமும் இப்படி பட்ட மனிதர் எப்படி ஆனார் என்பது நெஞ்சங்களை கண்ணீரில் நனைக்கும் சந்தனகாடு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் கொண்டாடியது அதே போல் படையாண்ட மாவீரா திரைப்படமும் இருக்கும் சந்தனகாடு வாய்ப்பை கொடுத்தது மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அதனை கொண்டாடியது காடுவெட்டி குரு அவர்கள் அப்போது சந்தனகாடு எடுக்கும் போது மருத்துவர்.அன்புமணிராமதாஸ் அவர்கள் மீதமுள்ள பகுதியையும் நீங்கள் எடுக்க வேண்டும் என முழுமையாக எடுங்கள் என சந்தன காட்டை முழுமையாக எடுக்க வைத்தார் படையாண்ட மாவீரா மண்ணையும் இணத்தையும் அடுத்தகட்ட தலைமுறையும் காக்கும் வரலாறாக அமையும் என கூறினார் இப்பேட்டியின் போது பாமக மாவட்ட செயலாளர் ராஜா ,திரைப்பட நடிகரும் வீரப்பன் வாழ்க்கை வரலாறின் சந்தனகாடு நாயகனுமான கராத்தே ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *