
சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பூச்சாட்டு விழா;10 டன் வண்ண வண்ண வாசனை மலர்களை பக்தர்கள் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்….
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
பழமை வாய்ந்ததும், பிரசித்திபெற்ற இந்த திருகோவிலில் உள்ள அம்மனை வழிபட்டு சென்றால் வேண்டியதை நிறைவேற்றி தருவது கோட்டை பெரிய மாரியம்மனின் சிறப்பு; சுற்று வட்டாரத்தில் உள்ள 18 பட்டி மாரியம்மனுக்கும் பெரிய அம்மன், இந்த கோட்டை மாரியம்மனை மட்டுமே, பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த திருகோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடித்திருவிழா கோட்டை பெரிய மாரியம்மன்க்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் பந்தகால் வைபவம் நடைபெற்றது இதனை தொடர்ந்து இன்று பெரிய மாரியம்மன்க்கு பூ சாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் 10 டன் எடையுள்ள அரளி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட ஏராளனமான வாசனை பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டன, அம்மனுக்கு ஜண்டை மேள தாளங்கள் முழங்க அம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
பின்னர் திருக்கோவில் பூசாரிகள் பூக்களை தூவி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர் சேலம் மட்டுமல்லாது பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். இதனால் பூக்களுக்கு நடுவே கோட்டை பெரியமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடி மாதம் முழுவதும் மாரியம்மன் திருக்கோயில்களில் திருவிழா நடைபெறும் ஆனால் கோட்டை பெரிய மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நடைபெற்ற பின்னர் மற்ற கோவில்களின் நிர்வாகிகள் கோட்டை மாரியம்மனிடம் பூக்களை கொண்டுவந்து அம்மனிடம் காண்பித்த பிறகுதான் மற்ற மாரியம்மன் திருக்கோயில்களில் பூட்சாட்டுதல் வைபவம் நடைபெறும் எனபது குறிப்பிடத்தக்கது.
இந்த பூச்சாட்டுதல் விழாவின் ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் கோவில் வளாகத்தில் சேலம் மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.