இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளிநாடுகள் தலையீடு இல்லை எனக் கூறுவதற்கு என்ன தயக்கம்?…ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை மோடி -கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி..
ஆணவ படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் -செல்வப் பெருந்தகை..
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை குழுவின் ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர்,
இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளிநாடுகள் தலையீடு இல்லை எனக் கூறுவதற்கு என்ன தயக்கம்?…ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை மோடி.
எங்கள் நாட்டில் தலையிடுவதற்கு நீங்கள் யார் என ஏன் கேட்கவில்லை?வாஜ்பாய் இந்திரா காந்தி கூட கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் முந்தைய காலங்களில்.
அமெரிக்கா அதிபருக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை என ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள் ?எங்கள் தலைவர் ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக அவர் பதில் கூற வேண்டும். சசிதரூர் தொடர்ச்சியாக கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக பேசி வருகிறார்.
ஆணவ படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும் என தொடர்ச்சியாக காங்கிரசும் வலியுறுத்தி வருகிறது.2014 ஆம் ஆண்டே இது தொடர்பாக வலியுறுத்தி வந்தோம்.பாஜக இதனை சட்டமாக ஏன் நிறைவேற்றவில்லை.
நம் நாட்டின் இறையாண்மைக்காக வெளிநாடுகளுக்கு காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட பலரும் சென்று வந்தனர்.ஆனால் சசி தரூர் தொடர்ச்சியாக கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக பேசுகிறார்.சசிதரூர் அப்படி பேசக்கூடாது என்பது என் கருத்து.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு அவர் இப்படி பேசக் கூடாது.ஒவ்வொருவரும் ஒரு பார்வையில் கூறுகிறார்கள் என் பார்வையில் சசி தரூர் பேசியது தவறு.
விசாரணை செல்பவர்கள் உயிரிழப்புக்கு தொடர்பாக பதில் அளித்த செல்வ பெருந்தகை,நம் உயிர்கள் எந்த விதத்திலும் சேதாரம் ஆகக் கூடாது.
இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு அரசிடம் கொடுக்கக் கூடாது.முதல்வர் நேர்மையாக அரசியல் செய்கிறார் அவருக்கு எந்த ஒரு குந்தகமும் காவல்துறை விளைவிக்கக்கூடாது.ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் ஏற்ற வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் கொண்டுவர தயாரானது.ஆட்சி மாற்றம் ஆன பிறகு 11 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்த அரசு மறுக்கிறது.எனவே விரைவில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.